அவளும் நானும் 2
பெண் குழந்தை மேல் பிரியத்தைக் கொட்டி வளர்க்கின்ற சமுதாயம் நம்முடையது. அதே நேரத்தில்,அந்தச் சிறுமி வளர, வளர அவளைச் சுற்றிப் பாதுகாப்பு வளையத்தை வைத்து பத்திரமாகப் போற்றி வளர்க்கச் செய்வதும் சமூக அத்துக்களை கரிசனத்தோடு விதித்து நடப்பாக்குவதும் அந்தச் சூழலே.
ஸ்ரீரங்கம் என்ற சிறு நகரில் எட்டு வயதுப் பேத்தியோடு வசிக்கும் அம்மம்மா கனிவையும் கண்டிப்பையும் சரிவிகிதத்தில் கலந்து அவளுக்குத் தரும் தன் வரலாற்றுக் கதையாடல் முழுக்க சின்னஞ்சிறு உரையாடல்கள் வடிவில் நேர்த்தியாக சித்தரிக்கிறார் ரம்யா. A narrative of carefully arranged staccato sentences.
உபதேசிக்காத, கண்டிக்காத, குமைய வைக்காத, படாடோபமில்லாத பனுவலாக ‘அவளும் நானும்’ நிறைவான வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது. இரண்டுவிதக் கதையாடல்களில் ரெட்டைக் குதிரையேறி வெற்றிகரமாக சஞ்சரிக்கிறார் ரம்யா. சுஜாதா பாரம்பரியத்தில் இன்னொரு சுவாரசியமான ஸ்ரீரங்கத்து கதைசொல்லி.
- இரா. முருகன்